சிரமதான நிகழ்வு- கோறளைப்பற்று வாழைச்சேனை-2023
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் Plastics and Pholythene Free Zone என்ற தொனிப்பொருளின் கீழ் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின், நாசிவன்தீவு கிராமசேவகர் பிரிவிலுள்ள முகத்துவார கடற்கரைப் பிரதேசத்தில் 12.06.2023 சிரமதானம் இடம்பெற்றது.
இச் சிரமதான நிகழ்வானது பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் மற்றும் பிராந்திய பொறியியலாளர்(CCD) ஆகியோரின் வழிகாட்டலுக்கமைவாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. அற்புதன் , கரையோர மூல வள திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோரின் பங்களிப்புடன் சமுர்த்தி பயனாளிகளைக் கொண்டு இடம்பெற்றது. இதற்கமைவாக கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் மற்றும் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் இழுவை இயந்திரம் ஈடுபடுதப்பட்டதொடு,சிற்றூண்டி நாசிவன்தீவு தனலெட்சுமி ஸ்டோர்ஸ் கடை உரிமையாளர் வழங்கியதோடு, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்கான Pholy bag நாசிவன்தீவில் அமைந்துள்ள Lanka Pholysack நிறுவனத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.














