கோறளைப்பற்று பிரதேச செயலக அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழிப் பயிற்சி நெறி (கட்டம்-02) - 2024
கோறளைப்பற்று பிரதேச செயலக அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழிப் பயிற்சி நெறியின் சிங்கள கலாசார விழாவானது போதனாசிரியர் M.M. செய்னுதீன் அவர்களின் தலைமையில் 25.05.2024 (சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களும், சிறப்பு அதிதியாக வாழைச்சேனை காவல்துறை பொறுப்பதிகாரி லசந்த பண்டார அவர்களும் கலந்து கொண்டனர். மேலும், R.கங்காதரன் - உதவித் திட்டமிடல் பணிப்பாளர், திருமதி. புனிதநாயகி ஜெயக்குமார்-நிருவாக உத்தியோகத்தர், திரு.J.ஜோர்ச்-கணக்காளர்,ஆசிரியர் ஆலோசகர்கள்,அதிபர், இரண்டாம் மொழிப் பயிற்சி நெறியின் அலுவலக உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். சிங்கள கலாசாரத்தை பிரதிபலிக்கும் முகமாக பாடல், நடனம், பாடலுடன் கூடிய நடனம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இப்பயிற்சி நெறியில் பங்குபற்றிய சகல உத்தியோகத்தர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இப்பயிற்சி நெறியில் பங்குபற்றிய சகல உத்தியோகத்தர்களும் சிங்கள கலாசார ஆடையணிந்து, சிங்கள பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்வுகளில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.














