கோறளைப்பற்று வாழைச்சேனை – 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு 

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வானது கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் 04.02.2024 அன்று காலை  8.20 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.R.கங்காதரன், நிருவாக உத்தியோகத்தர் திருமதி.ஜெயக்குமார் புனிதநாயகி , மேலதிக மாவட்ட பதிவாளர் திருமதி.புனிவதி ஆனந்தன் மற்றும்  அலுவலக உள்ளக,வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர்  கலந்துகொண்டனர். 

முதலாவது நிகழ்வாக பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடந்து நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான இரண்டு நிமிட அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. மேலு‌ம் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்கள்  ‘’வலுவான எதிர்காலத்திற்கான தொடக்கவுரை’’ எனும் இவ்வருடத்தின் கருப்பொருளுக்கு அமைவாக நாட்டு மக்களுக்கான சேவையினை எவ்வாறு விரிவு படுத்தமுடியும் என்பதனையும், தேசிய சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தினையும் தனது உரையின் மூலம் வெளிப்படுத்தினார். இறுதியாக, வளம்மிக்க நாட்டை உருவாக்கும் நோக்கோடு 'சுவதரணி மூலிகைப் பயிர் வாரம்' எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட மூலிகைக் கன்றுகள் நடும் திட்டத்தின் தொடர்ச்சியாக மூலிகைப் பயிர்கள் நடப்பட்டன.

 

WhatsApp Image 2024 02 04 at 9.19.05 AM  WhatsApp Image 2024 02 04 at 9.18.58 AM  WhatsApp Image 2024 02 04 at 9.19.02 AM  WhatsApp Image 2024 02 04 at 9.19.06 AM  WhatsApp Image 2024 02 04 at 9.18.59 AM

Scroll To Top