கோறளைப்பற்று வாழைச்சேனை-காணாமல் போனோர் தொடர்பான விசாரணை – 2023
மாவட்ட செயலகத்தின் அறிவித்தலுக்கமைவாக காணாமல் போனோர் தொடர்பான விசாரணையானது கோறளைப்பற்று பிரதேச செயலாளரின் வழிகாட்டளுக்கமைவாக, உதவிப் பிரதேச செயலாளரின் தலைமையில் கோறளைப்பற்று பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (04.09.2023) இடம்பெற்றது. இதில் அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள், காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்குழு அங்கத்தவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், கோறளைப்பற்று பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக,கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காணாமல் போனோரின் உறவினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.மட்டக்களப்பு காணாமல் போன ஆட்கள் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட குழுவினரால் விசாரணை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.














