கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் பொங்கல் விழாவானது இன்று 19.01.2022 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் உதவி பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபன் தலைமையில் கலாச்சார பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலக வளாகத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது .
பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 12 கிராம சேவக பிரிவுகளும் மற்றும் பிரதேச செயலகமும் உள்ளடங்கலாக 13 பொங்கல் பானைகளில் பல்வேறு விதமான சுவையான பொங்கல்கள் இடம் பெற்றதுடன், அறநெறி பாடசாலைகள் மற்றும் கலைக் குழுக்களின் பாரம்பரிய கலை இலக்கிய நிகழ்வுகளும் பொங்கல் விழாவினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது .இன் நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு R. கங்காதரன் , கணக்காளர் திரு S.ரூபாகரன் , நிருவாக உத்தியோகத்தர் திரு. R. பாஸ்கரன் , மேலதிக மாவட்ட பதிவாளர் திரு. R சசிகுமார் , சமூர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி .B தேவமனோகரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , கிராம மட்ட அமைப்புகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.













